Chapter 40
புதிதாய் பூத்த புதுமலரே..
புன்னகையை ஏனோ.. நீ தொலைத்தாய்..
புன்னகையைத் தர நான் காத்திருந்தும்..
புண் படுத்தி ஏனோ.. நீ விலகிச் சென்றாய்..
காதலாகி.. கசிந்துருகி..
“அவள் திட்டமே வேறு ஆண்ட்டி.. உங்கள் மகன் காதலிக்கிறேன்னு சொன்னவுடனேயே அதை ஏற்றுக் கொண்டால் அவளுக்கு மதிப்பில்லைன்னு நினைத்தாள்.. உங்கள் மகனை அலைய விட்டு அதற்குப் பின்னால் போனால் போகிறது என்று காதலித்தால்தான் அவளுக்கு மதிப்பிருக்கும்ன்னு என்னிடமே சொன்னால் ஆண்ட்டி..”
“நிஜமாகவா அவள் அப்படிச் சொன்னாளா..?”
“ஆமாம் ஆண்ட்டி.. இதுமட்டுமா உங்கள் மகன் தூக்கமாத்திரைகளை சாப்பிடும் ரேன்ஜிற்கு போய் விட்டராம்.. இதைச் சொல்லிச் சொல்லி அவள் சிரித்தாள் ஆண்ட்டி..”
மகேஸ்வரிக்கு ரத்தம் கொதித்தது.. அவள் பெற்ற மகனை சந்தியா எளிதாக நினைத்தாள் என்பதை அவளால் தாங்க முடியவில்லை..
“இப்படிக் கூட ஒரு ராட்ஸஸி இருப்பாளா..?”
“இருக்கிறாளே.. இவ்வளவையும் செய்து விட்டு இப்போது உங்கள் மகனுடன் சிரித்துப் பேசிப் பழகுகிறாளாம்.. உங்கள் மகன் அவளுக்கு பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஆண்ட்டி.. இது உங்களுக்குத் தெரியுமா.. தெரியாதா..”
அவ்வளவுதான் மகேஸ்வரியின் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டது..
‘எனக்கு ஒரு பருத்திச் சேலை வாங்கிக் கொடுக்கிற வழியைக் காணோம்.. அவளுக்கு பட்டுச்சேலை வாங்கிக் கொடுத்திருக்கிறானா..’
காயத்ரி மகேஸ்வரியின் மனநிலையை புரிந்து கொண்டு தொடர்ந்து வேப்பிலை அடித்தாள்..
“நகைக் கடையில் ஒரு நெக்லஸ் பார்த்தாளாம்.. அதை நாளைக்கே ஜீவாவிடம் சொல்லி வாங்கித்தரச் சொல்லப் போகிறேன்னு என்னிடமே சொல்கிறாள்.. ஆண்ட்டி.. எனக்கு எப்படியிருக்கும்.. நீங்களே சொல்லுங்க..”
காயத்ரியின் கண்கள் உண்மையிலேயே கலங்கிவிட.. மகேஸ்வரியின் மனதில் இரக்கம் சுரந்தது..
‘கட்டிக் கொள்ளப் போகிற பெண்ணிடமே அவளுடைய வருங்கால கணவனின் நிகழ்கால காதலி பெருமையடித்தால் அந்தப் பெண்ணின் மனது என்ன பாடுபடும்..’
“இதோ பாரும்மா.. நீதான் என் வீட்டு மருமகள்.. சந்தியா என் மருமகளாக ஒருநாளும் வரமுடியாது..”
மகேஸ்வரியின் மனதில் இடம் பிடித்துவிட்ட காயத்ரி வெற்றிவாகை சூடியவளாய் ஹாஸ்டலுக்குத் திரும்ப மகேஸ்வரி கொந்தளிக்கும் கோபத்தோடு ஜீவாவைத் தேடி ஜிம்முக்கே போய் விட்டாள்..
“ஜீவா டேய் ஜீவா..” அவள் குரல் கொடுக்கவும்..
“அண்ணே அம்மா வந்திருக்காங்க.. போலண்ணே..” என்று ஜீவாவின் உதவியாளர்கள் சொன்னார்கள்..
“வாங்கம்மா..” ஜீவா மகேஸ்வரியின் எதிரே உட்கார்ந்தான்..
“ஏண்டா உன் மனசில் என்னதாண்டா நினைத்துக் கொண்டிருக்கிற..? அந்த சந்தியா நில்லுன்னா நின்னு.. உட்காருன்னா உட்காருவாயா..?”
“இப்போது என்னம்மா நடந்து விட்டது..?”
“நான் தங்கம் போல காயத்ரியை உனக்குப் பொண்ணு பார்த்து வைத்திருக்கேன்.. நீ தகரக் கட்டியைக் கட்டிக்கிரனும்னு கனவு காண்கிறாயாமே.. அந்த சந்தியாவிற்கு பட்டுச்சேலை வாங்கிக் கொடுத்திருக்கிறாயாமே.. கேட்கிறதுக்கு ஆள் இல்லைன்னு நினைத்துக்கிட்டு இருக்கியா..?”
மகேஸ்வரி வார்த்தைக்கு வார்த்தை செய்தாயாமே.. வைத்தாயாமேன்னு சொன்னதில் அவள் யாரோ ஒருவருக்கு எடுப்பார் கைப்பிள்ளையாய் மாறியிருப்பதை ஜீவா புரிந்து கொண்டான்..
‘அந்த யாரோ ஒருவர் யார்..? காயத்ரியா..?’
அன்று இரவு ஜீவாவிடமிருந்து செல்போன் வழியாக செய்தி சந்தியாவுக்கு போனது அவள் ஸ்தம்பித்து நின்று விட்டாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.