Chapter 12 — Akalvizhku — அகல் விளக்கு
உக்கிரத்தில் இருந்த பிரசன்னாவின் கையில் குளிர்ந்த தண்ணீர் பாட்டிலைத் திணித்து தாகத்தை தணித்துக் கொள்ளச் சொன்னான் ரகுவரன்.. கத்திக் கத்தி தொண்டை வறண்டிருந்ததால் மறு பேச்சுப் பேசாமல் தண்ணீர் பாட்டிலைக் காலி செய்து தாகத்தை தணித்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி அமைதியடைந்தான் பிரசன்னா.. ஆறுதலாகப் பேசப் போனால் அதற்கும் அவன் டென்சன் ஆவான் என்பதினால் எதுவும் பேசாமல் கார் என்ஜினைக் கவனிக்க ஆரம்பித்தான் ரகுவரன்.
