Chapter 19 — Aarathanai — ஆராதனை
பெற்றவளைப் போல.. குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து பரவசமடைந்த கௌசலயாவை பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்..
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
பெற்றவளைப் போல.. குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து பரவசமடைந்த கௌசலயாவை பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்..
‘வைதேகியின் சாவுக்கு நியாயம் கிடைக்கும்.. அதே சமயம் அவள் எங்களைப் பெத்தவா கிட்டயே மறைக்க நினைத்த அந்தரங்கங்கள் வெளிப்படும்.. அது வேண்டாம்ன்னு நினைத்தேன்..” ஆழ்ந்த குரலில் சொன்னாள் கௌசல்யா..
வல்லவர்களுக்கு புல்லும் ஆயுதம்.. சாகஸக்காரர்களுக்கு பொடித்துகள்கூட ஆயுதம்.. மனோஜின் தாய் ஒன்றுமேயில்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்கினாள்..
‘அவளுக்கு என்னடி.. என் குழந்தை ராணி போல வாழ்வா..” ராமாமிர்தத்தின் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது..
அது ஏன் என்று கௌசல்யாவிற்குப் புரியத்தான் இல்லை.. அவர்களின் தந்தையும்.. தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த வீடு தான்.. அவளும் வைதேகியும் பிறந்து .. தவழ்ந்து.. தளிர்நடை போட்டு வளர்ந்ததும் இந்த வீடுதான்..
‘நோக்குத் தெரியாதது ஒன்றுமில்லை வைதேகி.. உன் கல்யாணத்துக்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டேன்னு நோக்கே நன்னாத் தெரியும்..”
இருதயத்தை வாள் கொண்டு அறுப்பது என்பதை அது வரை எழுத்தினில் படித்திருக்கிறாள் கௌசல்யா… வைதேகியின் கடிதத்தைப ;படித்தபோது உணர்வு பூர்வமாக அதை உணர்ந்தாள்..
கௌசல்யாவின் முகத்தில் தெரிந்த துயரம் வார்த்தைகளில் சொல்ல முடியாததாக இருந்தது.. குற்றுயிராய் கிடக்கும் அடிபட்ட பறவையின் பார்வையை அவளிடம் கண்ட சக்திவேலின் இதயம் கனத்தது..
‘என்ன மாப்பிள்ளை..?” குரல் நடுங்க கேட்டார் ராமாமிர்தம்.. ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க மக வேலை பார்க்க ஆத்தை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு நீங்க சொன்னதாக நினைவு…”
மனோஜின் பார்வை.. ஓர் வித அலட்சியத்துடன் சக்திNலின் மீது படிந்தது..’ஆமாம்.. உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு.. இந்தக் குட்டி உன் பின்னால வந்திருக்கிறா..?”